Monday, June 20, 2011

சத்ய சாய்பாபாவின் அறையில் தொண்ணூற்றி எட்டு கிலோ தங்கமும் பன்னிரண்டு கோடி ரூபாய் பணமும்...


சாய்பாபாவைக் குறை சொல்லி ஒன்னும் பண்ண முடியாது..
நம்ம மக்களுக்கு மட்டும் ஏன்தான் இப்படி புத்தி குறுக்க பாயுதோ தெரியல. இருக்குற கோடானகோடி கடவுளெல்லாம் பத்தலை.. இதுல இந்த மாதிரி போலியா வேஷம் போட்டு சம்பாதிக்கிறவங்களையும் கடவுளா பார்த்து என்னத்த கண்டாங்களோ தெரியல.. வேற எந்த மதத்துலயும் இத்தனைக் கடவுள்கள் இல்ல. படைக்க, காக்க, அழிக்க, இந்த மெயின் கடவுள்களுக்கு பூ தூவ, வெயிலடிக்க, மழை வர, காத்தடிக்க... அப்பப்பா.. இதுல.. இந்த கடவுள்களுக்கும் மக்களுக்கும் இடையே இடைத்தரகர்களாய் நாலு காவி வேடதாரிகள்... இந்த மாதிரி சாமியார்களோட பக்தர்கள் லிஸ்ட எடுத்து பாருங்க... கோடி கோடியா பினாமி பேர்ல பணம் சேர்த்து வெச்சிருக்குற பெரிய மனுஷன், பித்தலாட்டக்காரன், அரசியல்வாதி..... ஒழுங்கா உழைப்பு மேல நம்பிக்கை வெச்ச எவனும் எட்டி கூட பார்க்க மாட்டான்.. எல்லா பாவமும் செஞ்சுட்டு இப்படி சாமியார்கிட்ட போய் பாவ மன்னிப்பு கேட்கிறாங்களா?? மனுஷன் தப்பு செய்யக்கூடாது, ஒழுக்கம் தவறி நடக்கக் கூடாது. கடவுள் ஒருத்தர உருவகப்படுத்தி அந்த நம்பிக்கைய இந்த முட்டாள் மனுஷங்களுக்கு குடுத்தா மனிதகுலம் சிறந்து விளங்கும் (!!!) அப்படின்ற எண்ணத்துல கடவுள்கள் உருவாக்கப்பட்டு இருக்கலாம். ஆனா நம்ம மக்கள் எப்படி தெரியுமா... ??'செய்யுற தப்பெல்லாம் செஞ்சுகிட்டு போலிஸ் காரங்களுக்கு மாமூல் குடுக்குற மாதிரி கடவுளுக்கும் குடுத்துட்டா, சாமி கண்ண குத்தாதுனு கடவுளையும் ஏமாத்திட்டு இருக்காங்க.. சரி.. சாமி கல்லா தான இருக்கு.. சாமி பேர சொல்லி நாமளும் வசூலிக்கலாம்னு ஒரு கும்பல் காவி வேஷ்டிய கட்டிக்கிட்டு கிளம்பிருது.. கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்னு நம்ம மக்கள் சொன்னா என் எச்சிலிலும் இருப்பார்னு வாய்ல இருந்து லிங்கம் எடுத்து காமிக்கிறாங்க.. இதுல இந்த சாய் பாபா வெள்ளில தங்க வேலைப்பாடு செஞ்ச கட்டில்ல தான் தூங்குவாராம்... தங்க சிம்மாசனத்தில தான் உட்காருவாராம்.. என்ன கொடுமை சார் இது?? நம்ம நாட்டுல ஏதோ சி பி ஐ, வருமான வரித்துறை, சுப்ரீம் கோர்ட்னு எல்லாம் ஏதோ இருக்குதாமே.. அவங்க கண்ணுக்கெல்லாம் இந்த மாதிரி மடங்கல்ல இருக்கும் வெள்ளி தங்கமெல்லாம் துருபுடிச்ச இரும்பா தெரியுமோ?? அது சரி நாட்டை ஆளுற பிரதமரும் ஆட்டி வைக்குற தலைமையும் இந்த மாதிரி போலிகள் காலுல போய் விழும் பொது சி பி ஐ மட்டும் என்ன பண்ணும்.. அப்புறம் நம்ம வருமான வரித் துறைக்கு நேர்மையா உழைச்சு சம்பாதிக்கிறவன கண்டாதான் மூக்கு மேல வேர்க்கும்..
பெரியார் மாதிரி ஆளுங்க பகுத்தறிவு ஊட்டினா அந்த ஆளு கடவுளை நம்பாதனு சொல்றான் அப்படின்னு ஏசிப் பேசத்தான் தெரியும்.. இவங்க செய்யுற தப்புகளுக்கு, இவங்களோட இயலாமைக்கு எல்லாத்துக்கும் மொத்தமா குற்றம் சுமத்தப்பட ஏதோ ஒன்று வேண்டும்.. அந்த ஏதோ ஒன்று தான் கடவுள்.. ஏன்னா கடவுள் அப்படின்ற ஒருத்தர் நேர்ல வந்து கேள்வி கேட்க மாட்டார் பாருங்க.. (அப்படின்னு ஒருத்தர் இல்லைன்றது தனியா விவாதிக்கப்பட வேண்டிய சமாச்சாரம் ) அப்புறம், இந்த மாதிரி கடவுளின் பெயரால் பிறப்பெடுத்தவங்களுக்கு காசு மட்டும் தான் சோறு.. அதனால இவங்களும் தட்டி கேட்க மாட்டாங்க.. எல்லாத்தையும் உருவாக்கினது சாமினா, அந்த சாமியே பிறப்பெடுத்து வந்ததா கொண்டாடப்படும் இந்த சாமியார்ங்களுக்கு எதுக்கு இவ்வளவு சொத்து..
நம்ம மக்களின் குருட்டு நம்பிக்கை, கடவுளை குறுக்கு வழியில் அடைய நினைக்கும் குறுக்கு புத்தி, தவறான வழிகாட்டல்கள் இதெல்லாம் இந்த மாதிரி நாடு முழுசும் புரயோடிப்போய்க் கிடக்கும் சாமியார் புழுக்களுக்கு தீனி.. இந்த அரசியல்வாதிகளும், அவர்களின் பின்னணியில் இருக்கும் இந்த சாமியார் கூட்டங்களும், மொத்தமாய் இந்தியாவிற்கு பிச்சைக்கார வேஷம் போட்டு உலக நாடுகளுக்கு மத்தியில் காட்சிக்கு வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்..
கடவுள் நம்பிக்கை முற்றிலும் தவறு என்று நான் கூறவரவில்லை.. கடவுள் என்பது அவரவர்களின் புரிதலுக்கு உட்பட்டது..
மக்களே.. குறிப்பாக இன்றைய தலைமுறையினரே.. நாட்டில் நடக்கும் அரசியல் கூத்துக்களைக் கண்டும் அநியாயங்களைக் கண்டும் நீங்கள் அமைதியாய் இருப்பது மட்டுமல்ல, இந்த மாதிரி ஆன்மீகவாதிகளின் மேல் நீங்கள் கொண்டிருக்கும் குருட்டு நம்பிக்கைகளும் நம்மை மீண்டும் அடிமைத்தளைகளுக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன என்பதை மறவாதீர்!! கொஞ்சமேனும் பகுத்து அறிந்து பாருங்கள்...